இனி நான்,
மல்லி பூவை சூடப்போவதில்லை....
என் கூந்தலை விடுத்து,
அதை தானே நுகர்கிறாய்....
வளையல்கள் அணியப்போவதில்லை....
என் கையை விடுத்து,
அதை தானே உரசுகிறாய்....
கொலுசுகள் மாட்டப்போவதில்லை....
என் காலை விடுத்து,
அதை தானே கொஞ்சுகிறாய்....
இனிப்பை உண்ணப்போவதில்லை ....
என் இதழ்களை விடுத்து,
அதை தானே சுவைக்கிறாய்....
பௌர்ணமி நிலவும் மனதளவில்,
என் சக்காளத்தியே....
எனக்காக கவிதை எழுதுவதாய் கூறி,
அவளை அல்லவோ வர்ணிக்கிறாய்...