Wednesday, December 31, 2014

சக்காளத்திகள்!!!!

இனி நான்,
மல்லி பூவை சூடப்போவதில்லை....
என் கூந்தலை விடுத்து,
அதை தானே நுகர்கிறாய்....

வளையல்கள் அணியப்போவதில்லை....
என் கையை விடுத்து,
அதை தானே உரசுகிறாய்....

கொலுசுகள் மாட்டப்போவதில்லை....
என் காலை விடுத்து,
அதை தானே கொஞ்சுகிறாய்....

இனிப்பை உண்ணப்போவதில்லை ....
என் இதழ்களை விடுத்து,
அதை தானே சுவைக்கிறாய்....

பௌர்ணமி நிலவும் மனதளவில்,
என் சக்காளத்தியே....
எனக்காக கவிதை எழுதுவதாய் கூறி,
அவளை அல்லவோ வர்ணிக்கிறாய்...

Tuesday, December 30, 2014

யாரடி நீ மோகினி.....

கற்பனையில் தாயான
தலைவியை எதிர்ப்பார்க்கும்...
கனவில் காதலியான
தோழியை எதிர்பார்க்கும்....
நினைவில்,
மோகினியாகவே எதிர்பார்க்கும்...
நீ.....
கண்முன்னே கடந்து சென்றாலும்,
அவளோ இவள் என்று,
தோன்றாதடா உனக்கும்.....