விளங்கா மொழியில்
புலம்புகையில்...
கனவில் புன்னகை
உதிர்கையில்....
ஒளிமுகத்தில் இறைதொழ
எண்ணுகையில்...
புதியதை கண்டு வியக்கும்
கண்களில்...
பயத்தில் விரல் பிடித்து
நடக்கையில்...
வலுவில்லா கைகள் தொட்டு
கைதுசெய்கையில்...
உறதியான பிடிவாதத்தில்...
தாமதித்தால் கவலையுறும்
மனதில்...
இன்பத்தில், அணைக்கட்டா
பொக்கைவாய் சிரிப்பில்...
கண்ணீரை ஆயுதமாக்கும்
கலையில்...
என் தாய்மை என்றும் நிலையே,
என் தாயின் தாயும் என் பிள்ளை
என உணர்கையில .......
No comments:
Post a Comment